top of page

Providing Educational Facilities 

Water Filter  Project

As per the request of the Madu Zonal Education Director, a water purification filter was provided to the students and teachers of Mann/Sornapuri Government Muslim Kalavan School on 31 December 2025 to ensure access to clean and safe drinking water. The Zonal Education Director, Mrs. A. C. Wollenrain, attended the event as the Chief Guest, while Mr. R. Raviraj, Project Director of the Paari Foundation for Social Work for Education, participated and officially inaugurated the water purification machine.

We would like to express our heartfelt gratitude to the NCFPF for their generous financial contribution of Rs. 139,800.00, which made the successful implementation of this project possible.

Smart Classroom + Water Filter Project

As per the request of the Madu Zonal Education Director, a Smart Classroom was established at Man/Parappangandal RCTMS School to enhance and support students’ learning activities. In addition, a water purification machine was provided to ensure access to clean and safe drinking water.

The project was successfully implemented and inaugurated on 31 December 2025, with the participation of the Zonal Education Director, Mrs. A. C. Wollenrain Ammaiyar, and the Project Director of the Paari Foundation for Social Work for Education, Mr. R. Raviraj.

We would like to express our heartfelt gratitude to the NCFPF (North Carolinians for Peace foundation)  for their generous financial contribution of Rs. 513,279.00, which made the successful completion of this project possible.

 

பாரியின் வீச்சு..!

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்/பறப்பாங்கண்டல் RCTMS பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் Smart Classroom ஒன்றும் மற்றும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றும் நேற்றைய தினம் 31.12.2025ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி A.C வொலன்ரைன் அம்மையார் அவர்களும் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் கருத்திட்டப் பணிப்பாளர் திரு ர.ரவிராஜ் அவர்களும் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

குறித்த செயற்றிட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு 513,279.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கிய NCFPF அமைப்பினருக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Smart TV Project 

To enhance the quality of teaching and e-learning, Paari Foundation has introduced the Smart Classroom initiative. As part of this programme and to support the effective use of multilingual teaching and learning resources. Smart TVs are being provided to schools that do not yet have this facility.

In line with the approval letter issued by the Northern Provincial Director of Education and the request from the Mannar Zonal Director of Education a Smart TV was donated over under the "Paari e-Learning" project to support students of Mannar/Maruthamadu G.T.M.S. School. The distribution took place on Wednesday, 29.10.2025, with the participation of the Zonal Director of Education, the Chairman of Paari Foundation, school principals, teachers, and students. 

We would like express our heartfelt thanks to SIGMA PLC for their contribution of LKR 412,000.00 for making this project happen and impact the lives of students at this school. 

Mini- library Project 

பாரியின் வீச்சு!

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகின்றது!.

மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி A.C. வொலன்ரைன் அம்மையார் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக

மன்/பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் அமரர் செல்லையா மகாலிங்கம் அவர்களது ஞாபகார்த்தமாக "நூலகப் பெட்டகம்" ஒன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த செயற்றிட்டம் அமரர் அவர்களது மகன் திரு.மகாலிங்கம் சசிக்குமார் (நெதர்லாந்து )அவர்களது 309,000.00ரூபா உயரிய நிதிப் பங்களிப்புடன் 2025.10.04ம் திகதி வைக்கப்பட்டுள்ளது.

At the request of Mrs. A.C. Volantine, Zonal Director of Education, Madhu, a “Mini-library” was inaugurated in memory of the late Mr. Chelliah Mahalingam, with the noble aim of enhancing the reading skills of the students of Man/ Poomalarndhan Primary School. This meaningful initiative was carried out on 04.10.2025, with a generous financial contribution of Rs. 309,000.00 from the late Mr. Mahalingam’s son, Mr. Mahalingam Sasikumar (Netherlands).

Smart Classrooms Inaguration 

The noble vision of the late Mr. Nadarajah Vimalaranjithan, founder of the Paari Foundation, was further realised today. As part of our 2025 educational development initiatives, we completed a smart classroom project aimed at enhancing students’ learning motivation and strengthening teachers’ 21st-century teaching competencies.

Responding to a request from the Kilinochchi North Zonal Education Director, Mr. K. A. Sivanarulrajah, the first smart classroom at Kili/Kallaru Tamil Vidyalayam was inaugurated on 30.09.2025 by the Zonal Education Director himself. This installation was made possible through the generous financial contribution of Rs. 523,800.00 from the Rotary Club of Whitby, Canada.

On the same day, a second smart classroom was inaugurated at Mu/Theniyan Kulam A.T.K. School, following the request of Mrs. Surendran Annamalar, Zonal Director of Education, Thunukkai.

This initiative was made possible through the generous donation of Rs. 429,800.00 from Mr. Srikanth Sunkari, residing in the United Kingdom. This marks the second smart classroom inauguration carried out under the Paari Foundation’s ongoing efforts to advance educational opportunities.

பாரி அறக்கட்டளையின் நிறுவனர் அமரர் நடராசா விமலரஞ்சிதன் அவர்களின் உயரிய நோக்கமும் வேட்கைமிகு சிந்தனையும் இன்று மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான கல்வி முன்னேற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை மேம்படுத்துவதும், 21ஆம் நூற்றாண்டு கற்பித்தல் திறன்களை ஆசிரியர்களிடம் வலுப்படுத்துவதும் ஆகிய நோக்கங்களுடன், இதுவரை திறன் வகுப்பறை வசதிகள் இல்லாமல் இயங்கியிருந்த பள்ளிகளுக்காக திறன் வகுப்பறைகள் அமைக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு க. அ. சிவனருள்ராஜா அவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, கிலி/கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் உருவாக்கப்பட்ட முதல் திறன் வகுப்பறை 30.09.2025 அன்று வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இந்த திறன் வகுப்பறை ROTARY CLUB of WHITBY, CANADA அமைப்பின் ரூ. 5,23,800.00 மதிப்பிலான உயர்ந்த நிதிப் பங்களிப்பின் மூலம் அமைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

அதே நாளில், துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுரேந்திரன் அன்னமலர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, மு/தெனியன் குளம் அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட இரண்டாவது திறன் வகுப்பறையும் திருமதி சுரேந்திரன் அன்னமலர் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டம், இங்கிலாந்தில் வசிக்கும் திரு சிறிகாந்த் சுங்காரி அவர்களின் ரூ. 4,29,800.00 மதிப்பிலான உயரிய நிதிப் பங்களிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

 Bicycle donation
 
பாரியின் வீச்சு!

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் நெதர்லாந்து தேசத்து சிரேஸ்ர ஆலோசகர் இரவீந்திரன் அவர்கள் தனது மனைவி திருமதி இ.ஜெயரஞ்சனா(சிந்து) அவர்களது சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (2025.09.19) திகதி நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி கற்று வருகின்ற மாணவி ஒருவருக்கும் அவரது சகோதரி அவர்களது பயன்பாட்டிற்காகவும் பெண்களுக்கான துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார். குறித்த இரண்டு மாணவிகளும் பெண் தலைமைத்துவ குடும்பத்தில் வசித்து வரும் நிலையில் கல்வியில் சிறந்தும் விளங்குகின்றனர். குறித்த செயற்றிட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு திரு இரவீந்திரன் அவர்கள் 50,000.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவர்களுக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அமரர் ஜெயரஞ்சனா அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

In loving memory of his late wife, Mrs. E. Jayaranjana (Sinthu), Mr Ravindran, Advisor of the Paari Foundation for Education Social Work, from the Netherlands, marked her death anniversary by presenting a bicycle to a student of Nelliyadi Central College and her sister for their daily use on 19.09.2025.

The two students belong to a female-headed family and are excelling academically. Mr. Ravindran made a generous financial contribution of Rs. 50,000.00 towards the successful implementation of this project for which  we extend our heartfelt gratitude. We also pray for the eternal peace of the soul of Ms. Jayaranjana.

Mini- library Project 

பாரியின் வீச்சு!

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகின்றது! வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக யா/கட்டைவேலி மெ.மி.த.க பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுசாமி அவர்களது ஞாபகார்த்தமாக "நூலகப் பெட்டகம்" ஒன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த செயற்றிட்டம் அமரர் அவர்களது மகள் திருமதி. திசை வீரசிங்கம் வனிதா அவர்களது 392,500.00 ரூபா உயரிய நிதிப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. லண்டனில் இருந்து வருகைதந்த குறித்த குடும்ப உறுப்பினர்கள் வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ப.அருந்தவச் செல்வம் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் 56 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் மற்றும் மதியபோசனம் என்பவற்றையும் வழங்கி மகிழ்வுற்றனர். உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் நிறுவுநர் திருமதி விமலரஞ்சிதன் சசிவதனா அவர்களுக்கும் எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

In response to the request made by the Zonal Director of Education – Vadamarachchi, a “Mini-library" was inaugurated in memory of the late Kanapathipillai Ponnusamy, with the objective of enhancing the reading skills of the students at YA/Kattaiveli Maha Vidyalayam. This initiative was made possible through a generous financial contribution of Rs. 392,500.00 by his daughter, Mrs. Thisai Veerasingam Vanitha. Our kind donor, along with her family, together with the Deputy Director of Education, Mr. P. Arundhavaselvam, officially opened the facility.

In addition, they provided learning materials and mid-day meals to 56 students at the event. 

On behalf of our organisation, we extend our heartfelt gratitude to the generous donors and everyone's support. 

Water Tube well Project

"Water is life, and clean water means health." 

On the 28th of July 2025, Paari Foundation partnered with TFC Ilampookkal Football Club to provide safe drinking water at MN/ Thampanaikkulam A.T.M School. 

This project was requested by the Director of Education of the Madu Zone to recognise the urgent and essential need for clean drinking water in certain schools facing difficulties in accessing it.  With the generous financial contribution of TFC Ilampookkal Football Club in the Netherlands and support from Mr. Sinnathambi Ravindran, we were able to set up a pipe-borne system connected to a tube well at MN/ Thampanaikkulam A.T.M. School. 

On behalf of our organisation, we extend our heartfelt gratitude to everyone who helped make this project happen. 

Photocopier Machine Donation

பாரியின் வீச்சு...

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப் பணி அமையமானது மூளாய் அ.மி.த.க பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு மூன்று இலட்ச்சத்து ஜம்பத்து இரண்டாயிரத்து எழுநூறு ( 352 700.00) ரூபாய் பெறுமதியான புதிய நிழற் பிரதி இயந்திரம் ஒன்றினைக் கடந்த 2025.02.25ம் திகதி வழங்கி வைத்தது.

குறித்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உயரிய நிதிப் பங்களிப்பினை நெதர்லாந்து தேசத்தில் வசித்து வரும் திருமதி ஜெகநாதன் சபாநாயகி அவர்கள் வழங்கி வைத்திருந்தார். அவருக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

The Paari Foundation Educational Social Work Foundation donated a new photocopy machine worth Rs. 352,700 on February 25, 2025, to support the education of students at Moolai A.M.T.K. School.

This donation was made possible by the generous financial contribution of Mrs. Jagannathan Sabanayaki, who lives in the Netherlands. We extend our heartfelt gratitude to her for her support, on behalf of our foundation.

Jump rope and netball equipment

பாரியின் வீச்சு...

மாணவர்கள் தேசிய மட்டத்தில் சாதனைகள் நிகழ்த்திட ஓர் ஆரம்பமாய் பாரி!.

மு/கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலை அதிபர் மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் வலைப்பந்தாட்ட கம்பங்கள் இரண்டு உயரம் பாய்தல் கம்பங்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் கடந்த 2025.03.08ம் திகதி உலக மகளிர் தினத்தன்று பாடசாலையின் பிரதி அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு 50,000.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை நெதர்லாந்து தேசத்தில் வசித்து வரும் திரு. திருமதி ஜெகநாதன் சபாநாயகி குடும்பத்தினர் வழங்கி வைத்தனர். அவர்களுக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Paari is committed to helping students achieve excellence at the national level. In line with this vision, and at the request of the Principal of M/Karipattamurippu A.D.K. School and the Director of Education of the Thunukkai Zone, sports equipment—including netball poles and two high jump poles—was presented to the students to enhance their co-curricular activities. The event took place on March 8, 2025, during International Women's Day, under the chairmanship of the school’s Vice Principal.

This initiative was made possible by a generous financial contribution of Rs. 50,000.00 from the family of Mr. and Mrs. Jaganathan Sabanayaki, who reside in the Netherlands. On behalf of our organization, I extend our heartfelt gratitude to them for their significant support in making this project a success.

New School Uniform distribution

பாரியின் வீச்சு..

முன்பிள்ளைப் பருவ மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பாரி!..

துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக யோகபுரம் மூவேந்தர் முன்பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கும் நிகழ்வு கடந்த 2025.03.08ம் திகதி உலக மகளிர் தினத்தன்று நடைபெற்றது.

குறித்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு நோர்வே தேசத்தில் வசித்து வரும் தேவியம்மா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவருக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Support for the Educational Development of Preschool Students

In response to the request of the Director of Education of the Thunukkai Zone, a special event was held on March 8, 2025, International Women’s Day, to provide new uniforms to the students of Yogapuram Moovendhar Preschool.

This initiative was made possible through the generous financial contribution of one lakh rupees from Deviyamma, a kind-hearted supporter residing in Norway. On behalf of our organization, I would like to express our sincere gratitude to her for her invaluable support in making this project a success.

Water Purification System

நீர் இன்றியமையாது உலகு.

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் அ.த.க. பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சுத்தமான குடிநீரினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் அமரர் திருமதி இரவிந்திரன் ஜெயரஞ்சனா (நெதர்லாந்து) அவர்களது ஞாபகார்த்தமாக எமது அமையத்தின் சிரேஷ்ர ஆலோசகர் திரு சின்னத்தம்பி இரவிந்திரன் அவர்களது ஒரு இலட்சம் ரூபாய் (100,000) உயரிய நிதிப் பங்களிப்புடன் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

Water is essential for the world
In response to the request from the Principal and students of Puthukudiyiruppu Mannakandal A.D.K. School, a water purification system has been installed to provide clean drinking water. This initiative was made possible through a generous financial contribution of one hundred thousand rupees (100,000) from our organization's Senior Advisor, Mr. Chinnathambi Iravindran, in memory of the late Mrs. Ravindran Jayaranjana from the Netherlands.

bottom of page